வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்த போதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். முன்னதாக வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் விடுபட்டிருந்த நிலையில், அவரை வாக்களிக்க வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்.

இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதே விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்காமல், வாக்களித்தது போல போஸ் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Exit mobile version