சிவகங்கையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி அமைப்பினர், காவலர்களிடையே தள்ளுமுள்ளு!

vinayagar procession sivagangai

சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தடைசெய்யப்பட்ட வழியாக சிலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது.

சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் முன்பாக இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது தடை செய்யப்பட்ட நேருபஜார் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, வலியுறுத்தப்பட்டது.

ஆனால் போலீஸார் அனுமதிக்காததால் அவர்களை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோஷமிட்டனர். பிறகு தடையை மீறி செல்ல முற்பட்டபோது, போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Exit mobile version