சிவகங்கை..எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு விடியா அரசின் காவல்துறை அனுமதி!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை அடுத்து சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு விடியா திமுக அரசின் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்ளும், புரட்சித் தலைவி ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அனுமதி கோரி 2 முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், எனவே, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அதிமுக பொதுக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version