நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு திமுகவினர் அராஜகம்

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு என்ற பெயரில் தனது கட்சியினருடன் வலம்வந்தார். அப்போது அவருடன் வந்த திமுக நிர்வாகிகள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, நகராட்சி ஊழியர்களை வரவழைத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன் அராஜகத்தில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த அராஜக செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version