110 ஆண்டுகளுக்கு முன்பு அற்புதங்களை நிகழ்த்திய சித்தர்!!!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் 110 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தருக்கு காவடி எடுத்து கிராம மக்கள் நேர்த்திகடன் நிறைவேற்றினர்.  புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், பல்லாரி சுவாமி ஐயா என்னும் சித்தர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி அவர்களது குறைகளை போக்கினார். அவர் மறைந்ததும், அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினர். தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், தங்களது எதிர்கால வேண்டுதலுக்காகவும் சித்தருக்கு காவடி எடுத்து வழிபடத் துவங்கினர். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Exit mobile version