பொன்னேரியில் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

பொன்னேரியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 202 கிராமங்களில் ஏழு நாட்கள் நடைபெறும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றனர். பெறப்பட்ட 604 மனுக்களுக்கும் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் எனச் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் உறுதியளித்தார்.

Exit mobile version