வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை குரங்கு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்கை பிடிக்க ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தென்னலக்குடி பகுதிக்கு குரங்கு ஒன்று வந்துள்ளது. இது வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதுடன், குழந்தைகளையும் கடித்துள்ளது. இதனை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து குரங்கை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயற்சித்து, அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி குழுவினர் அங்கு முகாமிட்டு குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version