அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !

நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால், அறுவடைக்கு தயாரான சம்பா நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெற்கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேளாண்மைத்துறை அதிகாரிகளை உடனடியாக ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version