சென்னையில் பாடகியை தாக்கி செல்போன், மடிக்கணினி, பணம் பறிப்பு

சென்னையில் பாடகி சூர்யகலா என்பவரை தாக்கி செல்போன், மடிக்கணினியை பறித்து சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொளத்தூர் பூம்புகார் நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சூரியகலா. இவர் கரோகி பாடகியாக உள்ளார். நேற்று இரவு 12 மணி அளவில் பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அயனாவரம் பேருந்து நிலையம் வழியாக பில்கிங்டன் சாலை அருகே வரும் பொழுது பின்னால் ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்று கீழே தள்ளியது.

பின்னர் அவரை தாக்கிவிட்டு கைப்பையை பறித்து சென்றது. தலையில் காயமடைந்த சூரியகலாவை, இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சூரியகலாவின் பையில் இருந்த 1500 ரூபாய் ரொக்கம், 15 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு மடிகணினி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version