வருமா? வராதா ? சிம்புவின் அடுத்த பட அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கவுள்ள “மாநாடு” படத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் சிம்பு திரைத்துரையை விட்டு சற்று விலகி திடீரென ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள சிம்புவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரியில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்பிற்கு சிம்பு வராததால் படத்திலிருந்து சிம்புவை நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு தனது சொந்த தயாரிப்பில் “மகா மாநாடு” திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே சிம்பு சில மாதங்கள் வெளிநாட்டில் தங்கி இருந்தார். அவரது தாயார் உஷா சிம்பு படப்பிடிப்பிற்கு தொடர்ந்து வருவார் என உறுதியளித்ததை தொடர்ந்து மீண்டும் மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவின் புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் . இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்

Exit mobile version