சீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய ஆன்மிக பாடகர் நிர்மல் சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த நிர்மல் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பினார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 30ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நிர்மல் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு நிர்மல் சிங்குக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version