சென்னையில் முன் விரோதம் காரணமாக பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. சென்னை, மகாகவி பாரதி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் ராஜா என்ற மாணவர் பள்ளி முடிந்து வெளியே வந்த போது மர்ம நபர்களால் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டப்பட்டார். மாணவனை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பள்ளியைச் சேர்ந்த அபினேஷ் என்ற சகமாணவர் முன் விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post