ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

கரூர் அருகே ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவரை, முன்னாள் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூர் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சார்பாக தூர்வாரும் பணிக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை கேட்ட தங்கவேல் என்பவரை, முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மகாலிங்கம் அரிவாளாளல் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாடகைத் தொகை ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும், தொடர்ந்து தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை திமுகவினர் மிரட்டி வருவதால், பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version