எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேக் தாவூத்தை 15 நாள் காவலில் வைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சமீமுக்கு  பண பரிவர்த்தனை செய்ய உதவியதாக கடந்த ஜனவரி 22ல் அமீர், பிச்சைக்கனி, முகமது அலி ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அப்போது போலிஸாரிடம் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சேக் தாவூத்தை சித்தார்கோட்டையில் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சேக் தாவூத்தை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version