தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், குருவியான் மலை, வேப்பூர் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டமான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுகல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிகடல் பகுதியில் 40முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

Exit mobile version