மழை இல்லாததால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்தது

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து இருந்தாலும், விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாத காரணத்தினால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அலை மோதுகிறது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version