மழை கைகொடுத்ததால் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் கோடை மழை கைகொடுத்ததால் இயற்கை முறையில் சாகுபடி செய்த வெண்டைகாய் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள புதுப்பாளையம், பாளையங்கோட்டை, நகரபாடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைக்கால மழை கை கொடுத்துள்ளதால், 45 நாட்களில், பூக்கள் வெடித்து, காய் உருவாகி 50 நாட்களில் காய் அறுவடைக்கு தயாராகவிடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 80 கிலோ வரை வெண்டைக்காய் பறிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version