ஆந்திராவில் காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து

ஆந்திர மாநிலம் எள்ளையபாளையத்தில், காதல் விவகாரம் காரணமாக, இளைஞருக்கு கத்திக் குத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

நெல்லூர் மாவட்டம் எள்ளையபாளையத்தில், நாயக் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தாகவும், சில நாட்களுக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அந்த இளம்பெண் ஷாரூக் என்ற மற்றொரு இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கு ஒன்றில் நாயக் மற்றும் ஷாரூக் யதார்த்தமாக பார்த்துக் கொண்ட போது, இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் நாயக்கிற்கு கத்தி குத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷாரூக் மற்றும் அவரது நண்பர் சரத் கவுட் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Exit mobile version