இரண்டு நபர்களுக்கு ஒரே பான் எண் வழங்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சி

திருச்சி அடுத்த லால்குடியில் இரண்டு பேர் ஒரே பான் எண்ணுடன் வங்கிக்கு வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். லால்குடி அடுத்த கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர், சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவரது பான் எண்னை ஆராய்ந்த வங்கி அதிகாரிகள், செந்தில் குமாருக்கு வழங்கப்பட்ட பான் எண்ணானது அதே வங்கியில் வாடிக்கையாளராக இருக்கும் கீழவாளாடி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இரு செந்தில் குமாரின் தந்தை பெயர்களும் சுந்தரம் என்பதும் இருவரது பிறந்த தேதியும் ஒரே தேதி என்பதும் அப்போதுதான் தெரிய வந்தது. இவ்விவகாரம் குறித்து வருமானவரித்துறையில் புகார் அளிக்க உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version