சதுரகிரி மலைக் கோவிலில் சிவராத்திரி கோலாகலம்

நாடு முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவன் கோயில்களில் இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலய ஓட்டம் மற்றும் பக்தி பாடல்களை பாடி மகா சிவராத்திரி விழாவை சிறப்பித்தனர்.

இதேபோல்  விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடுநிசி மற்றும் சங்கொலி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version