ம.பி.யில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியை தொடரும் -முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 4-வது முறையாக ஆட்சியை தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில சட்டபேரவைக்கு கடந்த 28-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இதன் பிறகு வெளியான கருத்து கணிப்பில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இழுப்பறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் போபாலில் மாநில பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதில் அம்மாநில பா.ஜ.க தலைவர் ராகேஷ் சிங், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ்ராஜ் சிங் சவுகான், தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் பா.ஜ.கவுக்கு சாதகமாகவே இருப்பதாக கூறினார். விரக்தியடைந்திருக்கும் காங்கிரஸ் பொய்யான தகவல்கள் பரப்புவதாக குற்றம்சாட்டிய அவர், மத்திய பிரதேசத்தில் 4-வது முறையாக பா.ஜ.க ஆட்சியை தொடரும் என்றார்.

 

Exit mobile version