காங்கிரசுடன் பேச்சுவார்த்தை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மும்பையில் காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் சவான், மாணிக்ராவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் பட்சத்தில், காங்கிரஸ் முதல்வர் பதவிக்கு கோரிக்கை விடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version