மேகாலயாவின் ஷில்லாங்கில் சர்வதேச செர்ரி மலர் திருவிழா துவங்கியுள்ளது

மேகாலயாவின் ஷில்லாங்கில் சர்வதேச செர்ரி மலர் திருவிழா துவங்கியுள்ளது. மேகாலயாவின் ஷில்லாங்கில் செர்ரி மலர்கள் சீசன் துவங்கியுள்ளது. இதையடுத்து அங்கு செர்ரி மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.

ஆண்டுதோறும் இந்த காலத்தில் அங்கு சர்வதேச செர்ரி மலர்த் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 17ம் தேதிவரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவை அம்மாநில முதலமைச்சர் சங்மா தொடங்கி வைத்தார்.

இந்த திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version