மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் புகழாரம்

நாட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடைசி மூச்சாக இருந்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் நெகிழ்ச்சியுடன் கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் அஇஅதிமுக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லம் ஒன்றியம் செஞ்சி அடுத்த மேல்களவாய் கூட்டு சாலையில் நடைபெற்றது.

இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு நான்காயிரம் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி,சேலை,தையல் இயந்திரம்,எரிவாயு அடுப்பு, மாற்றுதிறனாளிகளுக்கு மிதிவண்டி,மட்டைப்பந்து போட்டி உபகரணங்கள், கைப்பந்து உள்ளிட்ட50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் சி.வி. சண்முகம், தனது பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வார்த்தைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி வருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசைப்படி அதிமுக நூறாண்டுகள் தாண்டியும் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version