நடிகர் ஷாருக்கானுக்கு ரசிகர்கள் தற்கொலை மிரட்டல்

நடிகர் ஷாருக்கான் அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என ரசிகர் மிரட்டல்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ஜீரோ என்ற திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்த படம் தோல்வியை தழுவியது. இதனால், ஷாருக்கான் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

 இந்த அதிர்ச்சியில் இருந்து மீள, அதிரடியாக புது படம் ஒன்றை அறிவிப்பார் என்று ஷாருக் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஓராண்டு முடிந்த நிலையில் அடுத்த படம் எதுவும் வரவில்லை. படத்திற்கான அறிவிப்பு கூட இல்லை. இதனால், 2019ம் ஆண்டு ஷாருக் ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஆண்டாக உள்ளது.

இதனால், ஷாருக்கான் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் ஷாருக் ரசிகர்கள் உருவாக்கிய #WeWantAnnouncementSRK ஹேஷ் டேக் டிரெண்ட ஆக ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு ரசிகர்,ஷாருக் சாப் போதும் போதும், ஜீரோ படத்துக்குப் பிறகு வேறு எந்த ஒரு படத்தையும் நான் பார்க்கவில்லை. நீங்கள் இல்லாமல் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனவே, எனக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்லுங்கள். இல்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.

Exit mobile version