போக்குவரத்து துறை சார்பில் உருவாக்கப்பட்ட நிழல் தளம்

சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி போக்குவரத்து காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட செயற்கை நிழல் தளத்தை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கடலூரில் போக்குவரத்து துறை மற்றும் கடலூர் சிறகுகள் எனும் தன்னார்வ அமைப்பினர் மூலம் செயற்கை நிழல் தளம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கொண்டு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சரவணன், போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்களுக்கு மோர் வழங்கி
உற்சாகப்படுத்தினார்.

Exit mobile version