ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட ஷபீக் அகமது கைது

ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக, தஞ்சாவூரை சேர்ந்த ஷபீக் அகமது என்பவரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூரை சேர்ந்தவர் ஷபீக் அகமது. இவர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போட் பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பல மாதங்களாக அவரை கண்கானித்து வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், உரிய சாட்சியங்களை திரட்டியுள்ளனர்.

அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், ஷபீக் அகமதை கைது செய்துள்ளனர். 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம், தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையின் பொது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version