நீலகிரியில் சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த திமுக பிரமுகர்

நீலகிரியில் சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கூடலூர் அருகே நெல்லியாளம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான திராவிடமணி என்பவர் இரண்டு சிறுவர்களை வீட்டுக்கு அழைத்து நெல்லிக்காய் மற்றும் திராட்சை ஒயினில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவர்கள் தந்தையிடம் கூறினர்.

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பல சிறுவர்களுக்கு திராவிடமணி பாலியல் சீண்டல் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version