தரமணி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது

தரமணி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் புக்கிங் கிளார்க் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்பவர் தரமணி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து மயிலாப்பூர் செல்வதற்காக தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்த ஆயிஷா தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரயில்வே டிக்கெட் புக்கிங் கிளார்க் யோகேஷ்,புக்கிங் கவுண்டரில் இருந்த லூகாஸ் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் ஸ்ரீராம் ஆகியோர் தனியாக இருந்த ஜோடியை அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆயிஷாவை மட்டும் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆயிஷா அளித்த புகாரின் பேரில் ரயில்வே டிக்கெட் புக்கிங் கிளார்க் யோகேஷ், லூகாஸ் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் ஸ்ரீராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Exit mobile version