பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஆட்டோ டிரைவருக்கு தர்ம அடி

லக்னோ அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, லக்னோவின் கோமதி நகரில் ஆட்டோவில் பயணித்த பெண் பயணிக்கு,ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அப்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து, வெளியில் குதித்து உயிர் தப்பியுள்ளார்.

பின் அவரை மீட்ட பொதுமக்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்ற பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை வழிமறித்த மக்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து அந்த நபரை மீட்ட போலீசார்,காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version