நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு : விசாரணை நாளை ஒத்திவைப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

இந்த வழக்கினை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்து வரும் நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் தொடர்புடைய உத்சவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு நீதிமன்ற விசாரணைக்கு நாளை ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version