தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது, மேலும் 3 வீராங்கனைகள் பாலியல் புகார்

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது, மேலும் 3 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து, அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகள பயிற்சி மையத்தை, தடகள பயிற்சியாளர் நாகராஜன் நடத்தி வந்தார். தன்னிடம் பயிற்சி பெற்ற 20-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு, அவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தடகள வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில், நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்துள்ளனர். அவரை 3 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நாகராஜன் மீது மேலும் 3 வீராங்கனைகள், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதன் மூலம், நாகராஜனுக்கு மேலும் நெருக்கடி முற்றியுள்ளது.

Exit mobile version