பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

சென்னை அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூரில், கடந்த 2017 ஆம் ஆண்டு, வீட்டில் தனியாக இருந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அசோக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

Exit mobile version