பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்

திருப்பூரில் பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு உறுதியானதால் போலீசார் தினேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version