இமாச்சல் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலி

இமாச்சல் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ராணுவ ஊழியர்கள் உட்பட 7 பேர் பலியாகினார். கட்டிடத்தின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

இமாச்சல் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா அருகில் உள்ள சோலான் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 17 ராணுவ வீரர்கள் உட்பட 28 பேர் மீட்க பட்ட நிலையில், 7 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Exit mobile version