சேவா சர்வீஸ் என்னும் புதிய ரயில் அக்.15ஆம் தேதி முதல் தொடக்கம்

சேவா சர்வீஸ் என்னும் பெயரில் பத்து புதிய ரயில்களின் போக்குவரத்து வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவற்றில் 3 ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளன.

நாட்டின் கடைக்கோடிப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சேவா சர்வீஸ் என்னும் பெயரில் புதிதாகப் பத்து ரயில்களை ரயில்வே துறை இயக்க உள்ளது. அசாம், டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில், இந்தப் பத்து ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ஐந்து ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட உள்ளன. ஐந்து ரயில்கள் வாரம் 6 நாட்களில் இயக்கப்பட உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பழனி – கோவை இடையே நாள்தோறும் சேவா சர்வீஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. கரூர் – சேலம், கோவை – பொள்ளாச்சி இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் சேவா சர்வீஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களின் போக்குவரத்து வரும் 15ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

Exit mobile version