லோக் அதலாத் மூலம் நிலுவையிலுள்ள வழக்களுக்கு தீர்வு காணப்படும்

நிலுவையில் உள்ள வழக்குகளில் எளிதில் தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டின் பேரில், லோக் அதலாத் என சொல்லப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், தாலுகா நீதிமன்றம் என தமிழகம் முழுவதும் 467 அமர்வுகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராத வழக்குகள், நிலுவையிலுள்ள வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளும் லோக் அதாலத்தில் தீர்த்து வைக்கப்படும்.

செக் மோசடி வழக்குகள், கடன் நிலுவை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்காக பட்டியல் இடப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், சிவில் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Exit mobile version