மேலூர் அருகே விளையாட்டு மைதானம் அமைத்துத்தர தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரையில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற தேவையான விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் என்று சிறுவர், சிறுமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாரம் தோறும் ஞாயிற்று கிழமையும், தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் தினந்தோறும் அண்ணா நகர் பகுதியில் இருந்து 4 பேர் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடிக் கொண்டே தேசிய 4 வழிச்சாலையில் கொட்டாம்பட்டி வரை சென்று வருகின்றனர். இவர்களுக்கு துணையாக அவர்களது பெற்றோர்களும், பயிற்சியாளர்களும், இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இந்தநிலையில், தாங்கள் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று சிறுவர், சிறுமியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version