இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு : கோவை தேவலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக கோவையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவை சக்தி சாலையில் உள்ள தேவலயத்தில் நடந்த இந்த கூட்டுப் பிரார்த்தனை வழிபாட்டில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண குணமுடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். உலகில் வேறு எங்கும் இதுப்போன்ற நிகழ்வு ஏற்படக் கூடாது என்றும், மத ரீதியான பிரச்சனைகள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டிக் கொண்டனர்.

Exit mobile version