தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க, 3 நாட்களாக தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க, 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரிய குளத்தை அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க மூன்றாவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் அருவியில் நீர் வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version