ஓடும் ரயிலில் தொடர் திருட்டு: வட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் கைது

ஓடும் ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 4 திருடர்கள் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டனர்.  

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், நேற்றிரவு ரயில்வே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, சந்தேகத்துக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 4 வட மாநில இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் 4 இளைஞர்களும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து, அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வட மாநில இளைஞர்கள் 4 பேரும் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தீப்ஜோதி, சஞ்சீவ் ராய், கிரேசார், அமர்ஜோதி ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை மற்றும் 8 செல்பேசிகளையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு, அவர்களைத் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version