தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் செப். 7-க்கு பிறகு தேர்தல் நடத்த தயார் – சத்யபிரதா சாகு

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை துவங்கிவிட்டதாக கூறிய அவர், செப்டம்பர் 7ம் தேதிக்குப் பின்பு, எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும், தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம் என்றும், இல்லையெனில் வழக்கம் போல் பார்ம் 7ஐ பூர்த்தி செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாம் எனவும் சத்யபிரதா சாகு குறிப்பிட்டார்.

Exit mobile version