ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2 சவரன் நகையை பறிப்பு

ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள நரியம்பட்டு பகுதியில் உள்ள டி.கே தெருவில் வசித்து வருபவர்கள் சாதிக் பாஷா, ஷாபானா தம்பதியினர். ஷாபானா வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன ஷாபானா தான் அணிந்திருந்த 2 சவரன் நகையை மர்மநபர்களிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர்கள் நகையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். பின் சாதிக் பாஷா கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Exit mobile version