ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் செந்தில்பாலாஜி…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி என்று அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் விமர்சித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன், தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு சுகங்களை அனுபவித்துக் கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அ.தி.மு.க கட்சிக்கும் துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி என்று விமர்சித்தார்.

மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி என்று தெரிவித்த செந்தில்நாதன், தற்போது நடைபெறுவது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version