இருக்கும் கட்சிக்கு செந்தில் பாலாஜி உண்மையாக இருக்க வேண்டும்

பல்வேறு கட்சிக்கு மாறிமாறி சென்ற செந்தில் பாலாஜி தற்போது உள்ள கட்சிக்காவது விஸ்வாசமாக இருக்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவதூறாக பேசிய செந்தில் பாலாஜிக்கு அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடும் தெரிவித்த நிலையில், பேசிய முதலமைச்சர், மனசாட்சியை விற்றுவிட்டு செந்தில் பாலாஜி நடந்து கொள்வதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார்.

செந்தில் பாலாஜி தனது காலில் கட்டி உள்ள சக்கரத்தை கழற்றிவிட்டு, இருக்கும் கட்சிக்கு உண்மையாக இருக்குமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கி உள்ளார்.

Exit mobile version