கரூரில் செந்தில் பாலாஜி தரப்பு போஸ்டரால் சலசலப்பு

கரூரில் மு.க.ஸ்டாலினை வரவேற்று, செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது. அரவக்குறிச்சி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வைத்த பேனர்களில், மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட மூத்த நிர்வாகிகளை செந்தில் பாலாஜி தரப்பினர் மதிக்கவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

இதேபோல், திமுக இளைஞரணி சார்பில் வைக்கப்பட்ட போஸ்டர்களில் செந்தில் பாலாஜி பெயரை தவிர்த்துள்ளனர். இதனால், புதிதாக சேர்ந்த செந்தில் பாலாஜியால் திமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version