சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை

எட்டயபுரம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முதலிப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர், விளாத்திகுளம் காவல்துறையினரால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதில் குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகளும், கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டுகளும் என, மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Exit mobile version