ஆடை இன்றி நடனமாட முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த சீனியர்கள்

ஒடிசா மாநிலம் சம்பூரில் உள்ள வீர் சுரேந்திர பல்கலைக் கழகத்தில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

வீர் சுரேந்திர பல்கலைக் கழகத்தின் விடுதி வளாகத்தில், சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ஆடைகளை இன்றி நடனமாட வற்புறுத்தி ராக்கிங்கில் ஈடுபடுபட்டனர். நடனமாட மறுத்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. திரைப்படங்களில் நடப்பது போல் அரங்கேறிய இந்த ராக்கிங் காட்சிகள் சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அமைச்சர் பிரேமனந்த நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version