600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடம் – அமைச்சர் செங்கோட்டையன்

32 மாவட்டங்களிலும் தமிழக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

சென்னையில் தனியார் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒரு பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் செலவில், 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் டிசம்பர் மாதத்துக்குள் அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்றார்.

Exit mobile version