சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்கு 12 டன் காய்கறிகள் அனுப்பி வைப்பு

சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்கு, ராமநாதபுரத்திலிருந்து இரண்டு லாரிகளில் 12 டன் காய்கறிகள், மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக எரிமேலி, நிலக்கல், பம்பை, கூனங்கரா, விளிக்கத்தோடு உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சபரி மலையில் நடைபெறும் அன்னதானத்திற்காக, ராமநாதபுரத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் ஐய்யப்ப பக்தர்களிடமிருந்து 12 டன் காய்கறிகள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதனையடுத்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் இரண்டு லாரிகளில் சபரி மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Exit mobile version